Tuesday, February 21, 2017

ஆதியோகி - ஒரு வனத்திருடன்

ஒரு அடர்ந்த காடு, பல கோடி உயிரினங்களுக்கு வாழ்வாதாரம். பல விலங்குகளுக்கு பசியாற்றும் சுனை சுரக்கும் வனம், போலவே மழையின் கீழ் உள்ள மக்களுக்கு குடிநீர் ஈயும் அட்சயப் பாத்திரம்.

ஒரு மனிதன் நாட்டை வெறுத்து காட்டிற்கு குடிபுகுகிறான், சில நாட்களுக்கு மரத்தடியில் தஞ்சம் கொள்கிறான். பிறகு கடும் குளிர், மழையிலிருந்து தன்னை காத்துக்கொள்ள சில மரங்களை வெட்டி ஒரு வீடு கட்டுகிறான். அப்போது அதை வாழ்வாதாரமாகக் கொண்ட சில பறவைகள், இன்னபிற உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இடம்பெயர்கிறது. அங்குள்ள பழங்கள், கீரைகள், காய்கறிகளை பறித்து பசியாறுகிறான்.

பின் தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை திருமணம் செய்து பிள்ளைகளை பெறுகிறான். பிள்ளைகள் வளர, ஓடியாடி விளையாட இன்னும் சிறிது இடம் தேவைப்படுகிறது. மேலும் சில மரங்களை வெட்டி தன் வீட்டை பெரிதுபடுத்துகிறான். தற்போது ஒரு 10குடும்பம் வாழுமளவு இடம் விஸ்தாரமாய் உள்ளது.

தன் குடும்பத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பணமீட்ட முடிவெடுக்கிறான். தனக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுள்ளதை பயன்படுத்தி, ஒரு லிங்கம் உருவாக்கி கோவில் காட்டுகிறான். இதன் மூலம் இன்னும் சில நூறு மரங்கள் வெட்டப்படுகின்றன. பல ஆயிரம் விலங்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. ஒன்று இரண்டாய் வந்த மக்களின் கவனத்தை ஈர்க்க யோகா, ஆனந்த குளியல் என்னும் கொறலி வித்தைகளை காட்டுகிறான். மக்கள் மெல்ல குவிகின்றனர்.

அவர்கள் வந்துசெல்ல பாதை, இடம் ஆகியவை குறுகலாக உள்ளதை உணர்ந்து மேலும் சில மரங்களை வெட்டி பாதை அமைகிறான், பெரிய கூடாரங்கள் அமைகிறான். 5% வனம் அழிகிறது. மக்களின் தண்ணீர் தேவையை உணர்ந்து அங்குள்ள நீரூன்றின் பாதையை மாற்றி ஒரு குளம் உருவாக்கி அதில் கடக்குமாறு வழி செய்கிறான்.

தனக்கு அல்லக்கைகள் சிலரை தத்தெடுத்து, அவர்களை தன்னை சத்குரு, ஆதியோகி என்று பல புனைப்பெயர்களில் அழைக்கச்சொல்கிறான், அவர்கள் தங்க அங்கேயே ஒரு குடியிருப்பை கட்டிக்கொடுக்கிறான். 25% வனம் அழிந்துவிட்டது.


Digital முறைகளில் ஏமாற்ற CD, MP3, DVD போன்று பல வகைகளை கையாள்கிறான். இவ்வளவும் செய்ய தனி ஆளாய் இயலாது அரசின் உதவி தேவை, அரசுக்கு பணம் தேவை. அரசு என்றால் அங்குள்ள மக்கள் பிரதிநி அல்ல பிரதமர். அரசுக்கும் இவனுக்கும் உள்ள தொடர்பு இன்று பத்ம விபூஷன் வரை வளர்ந்திருக்கிறது. எனவே பிரதமர் வரை செல்வாக்கு உள்ளதென்றால் வெறும் ஆன்மீகம் மட்டுமா நடக்கும்? சில நாட்களுக்கு முன்பு பெண்களை மயக்கி மொட்டையடித்த சம்பவம் நினைவிருக்கலாம்.

இது வெள்ளியங்கிரி மலையில் 55ஆயிரம் சதுரமீட்டராக உயர்ந்து நிற்கும் உங்கள் ஈஷா யோகா - ஜக்கி வாசுதேவின் கதை. மைசூரில் பிறந்து வளந்தவர், மைசூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இல்லாத இடமா? புயல், ஜல்லிக்கட்டு, விவசாயி மரணத்திற்கெல்லாம் வராத பிரதமர் மகாசிவராத்திரிக்கு இந்த கொள்ளையனை காண வருகிறார்.

No comments:

Post a Comment